பார்வதியம்மாளுக்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது போன்ற தோற்றம்.
இனியொரு...
இலங்கை அரச துணைப்படை அரசியல்வாதியும் சென்னையில் கொலை, கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு டில்லியில் கிடைத்த வரவேற்பும், இனகொலை குற்றவாளியும் பயங்கவரவாத இலங்கை அரசின் அதிபருமான ராஜபட்சேவுக்கு டில்லியில் வழங்கப்பட்ட மரியாதையும் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை தோற்று வித்துள்ளது. இது தொடர்பாக பல் வேறு போராட்டங்கள் சிறிய அளவில் நடந்தும் வருகின்றன. டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்கிற இந்தியா ஏன் எண்பது வயது முதிய பெண்ணான பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இது தொடர்பாக எழுந்துள்ள மனகொதிப்பை அடக்க மத்திய மாநில அரசுகள் பல் வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. அதில் முதலாவது விரைவில் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடப் போகிறது சிறுபான்மை தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறது என்பது ஒன்று இரண்டாவது பார்வதியம்மாளுக்கு சிகிச்சை தொடர்பானது.பார்வதியம்மாள் சிகிச்சை பெற வந்தவரை திருப்பி அனுப்பி விட்டு மிகக் கொடூரமான மனித உரிமகளை ஏளனம் செய்யும் படியான நிபந்தனைகளை விதித்தது இந்திய அரசு. உண்மையில் கருணாநிதியின் நேரடியான தலையீட்டின் படியும் விருப்பத்தின் படியுமே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த நிபந்தனைகளைத் தளர்த்தி விட்டதாக இந்தியா அரசு தெரிவித்துள்ளது. இதுவும் கருணாநிதியின் ஏற்பாடுதான். கவிஞர் வாலி, தேவர் சாதித் தலைவர் வாண்டையார், தங்கபாலு ஆகியோர் செம்மொழி மாநாட்டில் தமிழ் குறித்துப் பேசுவதும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் ஒட்டு மொத்தமாக அறிவுலகினரையும் அதிருப்தியாளர்களையும் சாந்தப்படுத்தும் நோக்கிலேயே இந்த அறீவிப்பு கருணாநிதியின் வேண்டுகோளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகதமிழகஅரசுவெள்ளிக்கிழமைவெளியிட்டசெய்தி: தமிழகத்தில்சிகிச்சைபெறபார்வதிஅம்மாளுக்குசிலநிபந்தனைகளின்பேரில்மத்தியஅரசுஅனுமதிகொடுத்துமே 7-ம்தேதிகடிதம்அனுப்பியது. மருத்துவசிகிச்சைக்காகமட்டுமேதமிழகம்வரவேண்டும், மருத்துவமனையில்தான்தங்கவேண்டும், அரசுமருத்துவமனையில்சிகிச்சைபெறவிரும்பினால்தேவையானஉதவிகளைதமிழகஅரசேசெய்யவேண்டும், எந்தஅரசியல்கட்சியினருடனோகுறிப்பாகதடைசெய்யப்பட்டஇயக்கங்களுடன்பங்குவைத்திருப்பவர்களுடனோதொடர்புவைத்துக்கொள்ளக்கூடாது, பெயர்குறிப்பிடப்பட்டஉறவினர்களோடுமட்டுமேதொடர்புவைத்துக்கொள்ளலாம்என்பவைநிபந்தனைகளாகத்தெரிவிக்கப்பட்டிருந்தன. இதன்பிறகுபார்வதிஅம்மாள்சென்னைவராமல்இலங்கைசென்றுவிட்டார். அவரின்உடல்நிலைகருதியும், தனதுமகளின்இல்லத்தில்தங்கிசிகிச்சைபெறபார்வதிஅம்மாள்விரும்புகிறார்என்பதைமனதில்கொண்டும், ஏற்கெனவேவிதித்தநிபந்தனையைதளர்த்திதனதுமகளின்இல்லத்தில்தங்கிசிகிச்சைபெறஅனுமதிக்கலாமாஎன்றும், அவரின்உறவினர்களும்நண்பர்களும்அவரைச்சந்திக்கஅனுமதிக்கலாமாஎன்றும்கேட்டுமத்தியஅரசுமே 18-ல்தமிழகஅரசுக்குக்கடிதம்எழுதியது. பார்வதிஅம்மாள்தனதுமகள்இல்லத்தில்சிகிச்சைபெறுவதில்தமிழகஅரசுக்குஆட்சேபம்இல்லைஎன்றும், அவரை, அவரதுநண்பர்கள்சந்திப்பதுபற்றிமத்தியஅரசேமுடிவுஎடுக்கலாம்என்றும்மே 20-ல்தமிழகஅரசுபதில்அனுப்பியது. இதைத்தொடர்ந்துமத்தியஅரசுஇலங்கையில்உள்ளஇந்தியதூதருக்கும்தமிழகஅரசுக்கும்கடிதம்அனுப்பியுள்ளது. பார்வதிஅம்மாள்தனதுமகள்இல்லத்தில்தங்கலாம்என்றும், அவரின்நண்பர்களும், உறவினர்களும்சந்திக்கலாம்என்றும்அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்அரசியல்கட்சிகளின்பிரதிநிதிகள்அவரைச்சந்திக்கஅனுமதிஇல்லைஎன்றும்அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துபார்வதிஅம்மாளின்கருத்துஅறிந்துமேல்நடவடிக்கைஎடுக்கப்படும்என்றுதமிழகஅரசுஅறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் அரசு சொல்லும் மருத்துவமனையில்தான் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்ற நிபந்தனைகள் மட்டும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நண்பர்கள் சந்திக்கலாம் அரசியல்வாதிகள் சந்திக்கக் கூடாது என்று நிபந்தனை இப்போதும் உள்ளது. உண்மையில் பிரபாகரனின் நண்பர்கள்? அல்லது பார்வதியம்மாளின் நண்பர்கள் யார்? வைகோ அல்லது வைகோவின் குடும்பத்தினர். நெடுமாறன் அல்லது நெடுமாறன் குடும்பத்தினர் என பார்வதியம்மாள் தமிழகத்தில் இருந்த காலத்தில் இவர்களுடந்தான் பழகி வந்தார். இவர்கள் தமிழகத்தில் அரசியல் தலைவர்களாக இருக்கிற காரணத்தால் பார்வதியம்மாளின் நண்பர்களாக இருக்கக் கூடாதா? என்ன? ஆக நண்பர்களை அரசியல் வாதிகள் என்று தடுக்கவும் முடியும். கருணாநிதிக்கு வேண்டிய அரசியல்வாதிகளை நண்பர்கள் என்று சொல்லிப் போய் பார்வதியம்மாளை சந்திக்க வைக்கவும் முடியும். அதை வருகிற தேர்தலில் ஒரு தம்பட்டமாகவும் அடித்துக் கொள்ள முடியும். கருணாநிதி எது வேண்டுமென்றாலும் செய்வார். எல்லாம் செய்வார். அதுதான் கருணாநிதி.