Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாபா ராம் தேவ் மருத்துவமனையில் பாலியல் வல்லுறவு

பாபா ராம்தேவ் பதாஞ்சலி ஆயுர்வேத வைத்தியசாலை என்ற பெயரில் இந்தியா முழுவதும் ‘கிளினிக்’களை நடத்தி வருகிறார்.

நொய்டாவில் உள்ள கிளினிக்கில் பணியாற்றும் டாக்டர் அஷோக் படோரியா என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவரிடமிருந்து தப்பி ஓடிவந்த ஊடகத்துறையில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், நொய்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னா ஹசாரே உடன் இணைந்து ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் ஊழலை மேட்டுகுடிகளின் ஏகபோக உரிமையாக்க முனைந்துவரும் ராம் தேவ் போன்ற சாமியார்களே பாலியலை அதிகார மேலாண்மைக்காகப் பயன்படுத்தும் மேட்டுக்குடி குற்றவாளிகள்.

Exit mobile version