Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாசிச அரசின் அடிமை தயா மாஸ்டருக்கே இடமில்லை

dhayaஇராணுவத்தால் வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படும் தயா மாஸ்டர் உடபட மேலும் சீயாஸ், ஜனா ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இறுதி நேரம் வரை இனப்படுகொலை அரசின் அடிமை போன்று பேசிவந்த தயா மாஸ்டர், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் நடைபெறும் தேர்த்தல் இராணுவ ஆட்சிக்குத் துணையான அதிகாரம் எதுவும் அற்ற அமைப்பை ஏற்படுத்துவதற்காகவே இலங்கை அரசு நடத்துகிறது. இந்திய அரசால் வழி நடத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவ அதிகாரத்தின் கீழ் நடத்தப்படும் இத் தேர்தல் அர்த்தமற்றது எனக் கூறி அதனை நிராகரிப்பதற்குப் பதிலாக அரசியலோடு தொடர்புகளற்ற நிர்வாகி ஒருவரை வேட்பாளராக நிறுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது.

ஏனைய இலங்கை பாசிச அரசின் துணைக் கட்சிகளான ஈ.பி.டி.பி போன்றவற்றிற்கு எந்தத் வகையிலும் குறைவின்றி அதிகாரமற்ற சிம்மாசனத்திற்காக மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி வருகிறது

Exit mobile version