பழ. கருப்பைய்யா அரசியல் விமர்சகரும், முன்னாள் அரசியல்வாதியுமான கருப்பைய்யா சில நாட்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செம்மொழி மாநாடு தொடர்பாக காட்டமான விமர்சன நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
தமிழகம் முழுக்க பரவலாக அந்த நேர்காணல் வரவேற்பைப் பெற்ற நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பழ.கருப்பைய்யாவின் வீட்டிற்குள் புகுந்த திமுக ரௌடிகள் அவரை கடுமையாகத் தாக்கினார்கள். வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் சேதப்படுத்தியவர்கள் அங்கிருந்த பெண்களையும் தாக்கினார்கள். கார், தொலைக்காட்சிப் பெட்டியும் அடித்து நொறுக்கப்பட்டது.கடந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் கருத்துரிமை பறிக்கபப்ட்டது போன்ற தோற்றத்தை பல முற்போக்கு அறிவுஜீவிகளும் திமுக ஆதரவாளர்களும் தோற்றூ வித்த நிலையில் கருத்துரிமையும், பேச்சுச் சுதந்திரமும் கருணாநிதி ஆட்சியில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.