Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பழங்குடி மக்களை நிர்வாணமாக ஆடவைத்து அவமானப்படுத்திய இந்திய அரச கூலிப்படை அதிகாரி

சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக போலீஸ் அதிகாரி ஒருவர் அரை நிர்வாணமாக நடனமாட வைத்த அருவருப்பான சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 அந்தமான் தீவில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஜவாரா பழங்குடியின மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளை மகிழ்விப்பதற்காக, சுற்றுலா நிறுவனங்கள் அவர்களை இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர், பழங்குடியின பெண்களை அரை நிர்வாணத்தில் நடனமாட வைத்து சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தி இருக்கிறார். இதை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதை ஆங்கில பத்திரிகை ஒன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுடுள்ளது.
இந்திய அரசு பழங்குடி மக்களை மிருகங்கள் போன்று அவர்களில் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்க அந்த அரசின் கூலிப்படைகள் அதே காப்ரட் நிறுவனங்களின் பணத்திற்காக மனிதர்களை அவமானப்படுத்தியுள்ளது.

Exit mobile version