Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பள்ளிக்கூட நீரில் நஞ்சு கலந்த விசாரணைக்காக காவலாளிகள் கைது

Ealaalai_school_01ஏழாலை சிறீமுருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் புள்ளிகள் சில கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே அப்பாடசாலையின் இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளனர்.

கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் ஆவார். காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொணடு பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் இன்றையதினம் (23) அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைதான இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரும் அதேவேளை இச்சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளதெனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், பாடசாலையில் நஞ்சுத்திரவம் ஊற்றப்பட்டமை தொடர்பில் பிரதேச அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு உள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 19ம் திகதி பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version