
இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதியின் சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான நடராசா கியானி என்பவர் சுன்னாகத்திலுள்ள அவரது வீட்டில் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.