Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பதவிக்காக மக்களைத் துன்புறுத்த வேண்டாம் : பௌத்தபீடம்

அதிகாரத்திற்காக. பொதுமக்களை துன்புறுத்துவதை விடுத்து, அரசாங்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மல்வத்த மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கடுமையான முறையில் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்கர்கள், ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சித்திருப்பது சிங்கள மக்கள் மத்தியில் முக்கிய விடயமாக கருதப்படுகிறது.
நாட்டுக்கு சேவை செய்த இராணுவ அதிகாரியை கைது செய்த விதம் மிகவும் மோசமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கம் சாதாரண மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தி தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Exit mobile version