Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பசிலை வியட்னாமிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்துவோம் என்கிறது போலிஸ்

basilஇலங்கையின் ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவிவகித்த மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்சவைத் தேடிவருவதாக இலங்கப் போலிஸ் தெரிவிக்கிறது. அமைச்சில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அவரைத் தேடுவதாக போலிஸ் மேலதிகக் கண்காணிப்பாளர் குணசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு சாதாரண பயணிகள் போன்று எந்தத் தடங்கலுமின்றிச் சென்ற பசில் ராஜபக்சவைக் கைது செய்து இலங்கைகுக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கிறோம் என்கிறது போலிஸ்.

தவிர பசில் அமெரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வியட்னாமிற்குச் சென்றுவிட்டார் என்ற தகவலையும் போலிஸ் திணைகளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் எல்லைக்குள்ளேயே ராஜபக்சவின் ஊழல் பேரரசின் அத்தனை உறுப்பினர்களும் இன்னும் மன்னர்கள் போல ஆட்சி நடத்தும் அதே வேளை பசிலை மட்டும் கைது செய்யப் போகிறோம் எனக் கூறுவதை பொதுவாக எவரும் நம்பவில்லை.

Exit mobile version