Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேபாள பகுதிகளை இந்தியா ஆக்கிரமிக்கிறது: பிரசண்டா

  காத்மாண்டு, ஜன.24: நேபாளத்துக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பு செய்வதாக மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, இந்திய தலைவர்களில் சிலர் இங்கிலாந்து அரசின் காலனி ஆதிக்க மனநிலையிலேயே செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் நேபாள நாட்டின் பிரச்னைகளில் தலையிடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

 எங்கள் கட்சி நாட்டின் சுதந்திரத்தைக் கட்டிக்காக்க உறுதியாக போராடி வருகிறது. அயல்நாடுகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்தும் போராடுகிறது. இந்திய-நேபாள எல்லையில் உள்ள கலாபனி, சுஸ்தா பகுதிகளில் நிலங்களை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றார் அவர்.

Exit mobile version