Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை.

அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் இந்து சமய மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.

 

Exit mobile version