Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெடியவன் குழுவின் உதவித் தலைவர் கபிலன் கைது: டெய்லி மிரர்

கபிலன் அல்லது நந்தகோபாலன் என்ற புலிகளின் பிரதானியும் நெடியவனின் உதவியாளரும் மலேசிய மற்றும் ஈரானிய அரசுகளின் உதவியோடு மார்ச் மாதம் 6ம் திகதி கைதுசெய்யப்பட்டார் என இலங்கை அரச சார்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. நெடியவனின் கட்டுப்பாட்டிலுள்ள புலிகளின் வலையமைப்பின் உதவித் தலைவரான கபிலன் இப்போது இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். போலி மலேசியக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவிலிருந்து தெஹ்ரான் ஊடாக லண்டன் பயணமான வேளையிலேயே கைதுசெய்யப்பட்டார்.
மற்றொரு உதவித் தலைவரான இரும்பொறை அல்லது அரவிந்தன் என்பவர் ஐரோப்பாவிலிருந்து இயங்குகிறார்.
இத் தகவல்களை அனைத்தையும் இலங்கை அரச  ஊடகம் தெரிவித்துளது. கைது உண்மையாயின் இலங்கை அரச பயங்கரவாதம் உலகமயமாவது வெளிப்படை. இது கே.பி ஐப் போன்று மற்றொரு சரணடைவு எனில் மிக முக்கிய உளவாளி ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

Exit mobile version