Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நூறாவது சர்வதேச பெண்கள் தினம் : அலெக்ஸ் இரவி

“எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’

– பாரதியார்

“Each person must live their life as a model for others”~ Rosa Louise McCauley Parks-February 4, 1913-October 24, 2005, African American Civil rights activist

இன்று நூறாவது சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க வேண்டும்.

International Women’s Day will reach a milestone in 2010 as it marks its 100th anniversary. For 100 years International Women’s Day celebrates the political, economic, cultural and social achievement of women around the world. Not only is IWD a celebration it also serves as reminder of the continuing struggle for equality that so many women face across the world.

இந்நாள் China, Armenia, Russia, Azerbaijan, Belarus, Bulgaria, Kazakhstan, Kyrgyzstan, Macedonia, Moldova, Mongolia, Tajikistan, Ukraine, Uzbekistan and Vietnam மற்றும் சில நாடுகளில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்கி வருகின்றனர். சில நாடுகளில் அன்னையர் தினத்திற்கு சமமாக இத்தினத்தை கடைபிடிக்கின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவில் சிறப்பாக பணியாற்றிய சின்னப்பிள்ளையின் காலை தொட்டு அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் வணங்கினார். இதையே இந்தியாவில் ஏழை எளிய பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதலாம். ஏழ்மையிலும் நாட்டில் தலைசிறந்த பெண்மணியாக உருவாகலாம் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது.

இனம்,மொழி,கலாச்சாரம்,பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை
குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை
முடிக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெண்கள் தினம் கொண்டாடுவது ஒழுங்கமையக் கடைபிடிக்கப்படுகிறது.

அதே நேரம், மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது என்பதும் உண்மை. அது என்ன மார்ச் 8 மகளிர் தினம்? என்று கேட்பவர்குள் உண்டு.

ஆனால் சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பிக்கின்றன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலைநேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கோள்விக்குறியாகவே காணப்பபடும் நிலையில் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள் என்று சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக் கின்றன.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, “இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்” ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்!

அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. (Great unrest and critical debate was occurring amongst women. Women’s oppression and inequality was spurring women to become more vocal and active in campaigning for change. Then in 1908, 15,000 women marched through New York City demanding shorter hours, better pay and voting rights).

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-ல்கொண்டாடப்பட்டது.
அதன் பின் பிப்ருரவரி கடைசி ஞாயிற்றுகிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. (In accordance with a declaration by the Socialist Party of America, the first National Woman’s Day (NWD) was observed across the United States on 28 February. Women continued to celebrate NWD on the last Sunday of February until 1913).

அதன் விளைவு 1910 இல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கிளாரா தலைமையில் கூடி சர்வதேச பெண்கள் மாநாடு கூடியது. சர்வதேச பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.அதன் பின்
சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. (In 1910 a second International Conference of Working Women was held in Copenhagen. A woman named a Clara Zetkin (Leader of the ‘Women’s Office’ for the Social Democratic Party in Germany) tabled the idea of an International Women’s Day. She proposed that every year in every country there should be a celebration on the same day – a Women’s Day – to press for their demands. The conference of over 100 women from 17 countries, representing unions, socialist parties, working women’s clubs, and including the first three women elected to the Finnish parliament, greeted Zetkin’s suggestion with unanimous approval and thus International Women’s Day was the result).

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். முதல் சர்வதேச பெண்கள் தினம் இலட்சக்கணக்கான பெண்கள்
அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்கு சென்ற இடத்தில் கருகி இறந்தனர். இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.
(Following the decision agreed at Copenhagen in 1911, International Women’s Day (IWD) was honoured the first time in Austria, Denmark, Germany and Switzerland on 19 March. More than one million women and men attended IWD rallies campaigning for women’s rights to work, vote, be trained, to hold public office and end discrimination. However less than a week later on 25 March, the tragic ‘Triangle Fire’ in New York City took the lives of more than 140 working women, most of them Italian and Jewish immigrants. This disastrous event drew significant attention to working conditions and labour legislation in the United States that became a focus of subsequent International Women’s Day events. 1911 also saw women’s ‘Bread and Roses’ campaign).

இதற்கிடையில் 1917-ல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்த சமயத்தில் பெண்கள் ரொட்டிக்காவும் அமைதிக்காவும் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்குள்ளவர்கட்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது
பிப்ரவரி 23. ஆனால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ம் நாள்.

ஆகவேதான் மார்ச் 8ல் சர்வதேச பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

(On the eve of World War I campaigning for peace, Russian women observed their first International Women’s Day on the last Sunday in February 1913. In 1913 following discussions, International Women’s Day was transferred to 8 March and this day has remained the global date for International Wommen’s Day ever since. In 1914 further women across Europe held rallies to campaign against the war and to express women’s solidarity).
(On the last Sunday of February, Russian women began a strike for “bread and peace” in response to the death over 2 million Russian soldiers in war. Opposed by political leaders the women continued to strike until four days later the Czar was forced to abdicate and the provisional Government granted women the right to vote. The date the women’s strike commenced was Sunday 23 February on the Julian calendar then in use in Russia. This day on the Gregorian calendar in use elsewhere was 8 March.)

அதன் பின் சர்வதேச பெண்கள் தினம் உலக முழுவதும் வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் வருடாவருடம் அதன் வளர்ச்சியும் கூடிய வேளையில் ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்களின் அரசியல், சமத்துவ, பொருளாதார கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அத்துடன் பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் திட்டங்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐ.நா உழைத்துள்ளது.
1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது.
(Since its birth in the socialist movement, International Women’s Day has grown to become a global day of recognition and celebration across developed and developing countries alike. For decades, IWD has grown from strength to strength annually. For many years the United Nations has held an annual IWD conference to coordinate international efforts for women’s rights and participation in social, political and economic processes. 1975 was designated as ‘International Women’s Year’ by the United Nations. Women’s organisations and governments around the world have also observed IWD annually on 8 March by holding large-scale events that honour women’s advancement and while diligently reminding of the continued vigilance and action required to ensure that women’s equality is gained and maintained in all aspects of life.)

இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்திய வரலாற்றில் பெண்கள் ஜனாதிபதியாகவும், பிரதம ராகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சி தலைவராகவும், ஆட்சியாளர்களாகவும், விண்வெளி வீராங்கனையாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். மேலும் பெண்கள் தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப் பாளர்களாகவும், குடும்பத்தலைவியாகவும் மேலும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் திகழ்கின்றனர். டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், விளம்பர மாடலிங்காகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்டரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். பெண்கள் இன்று வேலைக்கு சென்று குடும்ப பொறுப்பை நிர்வகிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உலக பெண்கள் தினமானது முழுமனதுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனி வரும் காலம் பெண்களுக்கு பிரகாசமான, சமமான, பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சமஅந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வியறிவுடையவர்களாகவும், தங்களது எதிர்காலத்துக்கு நிர்ணயிப்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் கிராமப்புற பெண்கள் வாழ்க்கை தரம் சற்று பின்தங்கியே உள்ள நிலையில் சற்று மெதுவாகவே முன்னேற்றம் அடைந்து வருகிறது. பொருளாதார முன்னேற்றத்திலும் சற்று பின்தங்கியே உள்ளனர். பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளான பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் போன்றவை தடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமை, வரதட்சணை, பேறுகால மரணம், தீ விபத்துகளுக்கு ஆளாவது என பெண் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

எமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கெளரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றன. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புகள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள். தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பலதரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.

அதே நேரம், ஆண்களை விட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பெண்களை குளிரும், உஷ்ணமும் அதிகமாகப் பாதிப்பதில்லை.இயற்கையிலேயே பெண்களுக்கு மனோ பலமும், உடல்பலமும் இருக்கிறது. பெண் குழந்தைகளே ஆண் குழந்தைகளை விட, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடக்கப் பழகி விடுகின்றன; விரைவில் பல் முளைப்பதும் பெண் குழந்தைகளுக்குத் தான்.வார்த்தைகளை சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள் தான். பெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகம் என்கிறது விஞ்ஞான ஆய்வு முடிவு.

பெண்களுக்கெதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் பல மட்டங்களிலும் பல விதமாக இடம்பெற்று வருகின்றன. அதாவது, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் தொல்லைகள், உடல் உள ரீதியான துன்புறுத்தல்களாக பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். பெண்களுக்கெதிரான வன்முறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுவதற்கான காரணங்களாக:

* யுத்தமும் இடப்பெயர்வும்

* பாதுகாப்பற்ற நிலைமை

* அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை

* பொருளாதார நெருக்கடிகள்

* முகாம்களில் முறையான முகாமைத்துவமின்மை

* ஆண்கள் தமது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துதல்

* நல்ல சுகாதார வசதிகளின்மை

* மகளிர் உரிமை தொடர்பாக போதிய தெளிவின்மை

போன்றவை காணப்படுவதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக் கூடிய பெண்களாக பின்வருவோர் காணப்படுகின்றனர்.

* வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்கள்

* வலதுகுறைந்த,

* கர்ப்பிணிப் பெண்கள்

* வயோதிபப் பெண்கள்

* சிறுபிள்ளைகளின் தாய்மார்

* சிறுமியர்

போன்றோர் முக்கியமானவர்களாகக் காணப்படு கின்றனர். உலகளாவிய முறையில் நடத்தப்பட்ட 50 ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூன்றுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் உடல், உள பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் போன்றவை பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடுகளா கும். எனவே இத்தகைய தினங்களில் பெண்க ளின் உரிமைகளைப் பாதுகாக்க தமது பங்களி ப்பை குடும்பம், வேலைத்தளம், சமூகம், அரசு உள்ளிட்ட அனைவரும் வழங்குதல் வேண்டும்.

இன்று எமது நாட்டை எடுத்துக்கொண்டால் சட்டத்தரணி நிமல்கா பர்ணாந்து சொல்கிறார்,

“ஒட்டுமொத்தமாக ஜனநாயகம், மனித உரிமைகள், சுதந்திர ஊடகம் என்பவற்றிற்குப் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் பெண் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். போருக்கான கூக்குரலிடையே மறைந்திருந்த வண்ணம் இவ்வொடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது”.
“போரும் சுனாமியும், இம்சையையும், இடப்பெயர்வையும் மாத்திரமே இன்று பெண்களுக்கு உரித்தாக்கியுள்ளது. போரின் இறுதிப் பெறுபேறுகள் எவ்வாறு அமைந்தாலும், அதன் கொடூரமான விளைவுகளை தாய்மாரும் மனைவியருமே அனுபவிக்கின்றனர். ஓட்டுமொத்தமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் பெண்களே துயரங்களை அனுபவிக்கின்றனர்”
அம்பாறை – மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்படுகின்றன”
“வன்முறையையும் இம்சைகளையும் இல்லாதொழிக்க, பெண்களாகிய நாம் முன்வருதல் வேண்டும்”
“பெண்களுக்கெதிரான வன்முறையை புறக்கணிப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும்” (http://www.lankahermes.com/2009/03/08032009.html)

உங்களுக்குத் தெரியுமா?
கடந்த சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய செய்தியில் என்.சரவணன் என்பவர் சொல்கிறார், “நாளொன்றுக்கு 750க்கும், 1000க்கும் இடைப்பட்ட கருக்கலைப்புகள் இலங்கையில் செய்யப்படுகின்றன. இதில் 5 தொடக்கம் 6 வீதமான கர்ப்பிணித் தாய்மார் இறக்கின்றனர். அதாவது மாதமொன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் இறக்கின்றனர். மேலும் பலர்பக்க விளைவுகளால் நோயாளர்களாகின்றனர். எதனால் தெரியுமா?

(http://lankawomen.blogspot.com/2009/01/8-750-1000.html)

இன்று எமது நாட்டில் நடந்த 30ஆண்டு போர்ச் சூழலில் பெண்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களிலும் கடந்தகாலங்களில் கிழக்கு மாகான பெண்களே பிள்ளைகளை இழந்தும், கணவனை இழந்தும் பாதிக்கப்படுள்ள நிலையில், தற்போது நடந்த கடைசி யுத்தத்தில் வன்னி பெண்கள் இக்கிழக்குமாகான பெண்களைப்போல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதே நேரம், இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஏர் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களாலேயே ஒரு விமானத்தை இயக்குகிறது.

மும்பையில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு செல்லும் இந்த விமானத்தில் 4 பைலட்டுகளும் பெண்கள். அவர்களுக்கு உதவி செய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள் அனைவரும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 14 மணி நேரம் பயணம் செய்யும் இந்த விமானத்தை முற்றிலும் பெண்களே இயக்குவது இதுவே முதல் முறை.

இது தவிர மும்பை – பெங்களூர், மும்பை – ஆமதாபாத், மும்பை – நாக்பூர் ஆகிய 3 உள்நாட்டு விமானங்களையும் இன்று (8ம் திகதி) பெண்களே இயக்குகிறார்கள். இந்திய விமான பைலட்டுகள், சங்கத்தில் 136 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்ற நிலையில் உலகளாவிய ரீதியில் பெண்கள் அமைப்புகள், அரசாங்கங்கள் மார்ச் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமேயாகும்.

This year’s theme of International Women’s Day is “Equal rights, equal opportunities: Progress for all”

So make a difference, think globally and act locally !!

Make everyday International Women’s Day. Do your bit to ensure that the future for girls is bright, equal, safe and rewarding!!!

அலெக்ஸ் இரவி

மேலும் கடந்த வருட சர்வதேச பெண்கள் தின செய்திக்கு:

சர்வதேச மகளிர் தினம் : வறுமைக்கும் வன்முறைக்கும் எதிராக பெண்கள் முழக்கம்!

சில அதிர்ச்சித் தரவுகள்:

http://www.thinakaran.lk/vaaramanjari/2009/09/13/?fn=g0909131&p=1

.

ஆதாரங்கள்/ Referances:

http://www.internationalwomensday.com/about.asp

http://www.lankahermes.com/2009/03/08032009.html

http://interestinghotpage.blogspot.com/2009/03/08.html

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6829

http://www.thinakaran.lk/vaaramanjari/2010/03/07/?fn=g1003071

http://www.alaikal.com/news/?p=33337

http://lankawomen.blogspot.com/2009/01/8-750-1000.html

Exit mobile version