Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று -09.03.13- சுவான்சீ பகுதியில் நாசிகளின் ஆர்ப்பாட்டமும் எதிர் ஆர்ப்பாட்டமும்

naziபிரித்தானியவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்க வேலையின்மையும் அதிகரிதுச் செல்கிறது. பிரித்தானிய பழைமைவாத வலதுசாரிக் கட்சியின் பிரதமர் டேவிட் கமரோன், தான் செய்வதற்கு ஒன்றுமில்லை, பணத்தை மரத்திலிருந்து பிடுங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரச் சரிவானது வெளி நாட்டவர் மீதான வெறுப்புணர்வாகத் திசை திருப்பப்படுகிறது. பாசிசக் கட்சிகள் பலமடைந்துவருகின்றன. நாளை 9.03.2012 அன்று நாஸிக் கட்சியாகக் கருதப்படும் தேசிய முன்னணி நாசி ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. 1941 ஆம் ஆண்டு நாஸிப் படைகளின் விமானக் குண்டுத்தாக்குதலில் 230 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாளன்று தேசிய முன்னணி சுவான்சீ என்ற இடத்தில் நாசி ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அதே நாளில் நாசி எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நாசி எதிர்ப்பாளர்கள் ஒழுங்கு செய்துள்ளனர். பிரித்தானியாவில் வாழும் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read :

http://democracyandclasstruggle.blogspot.co.uk/2013/03/wales-swansea-19th-february-1941-three.html

Exit mobile version