Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தென்னாபிரிக்கா உதவும்!

200kவெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கும், நாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் தென்னாபிரிக்கா உதவும் என அதன் சர்வதேச உறவுகள், ஒத்துழைப்பு அமைச்சர் என்கோனா மஷாபேன் உறுதியளித்தார்.

கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த போதே அவர் இவ்வாறு உறுதி அளித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர விடயங்கள் குறித்தும் உலக விவகாரங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் இச்சந்திப்பின் போது ஆராய்ந்தனர்.

நாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசை நிறுவுவதற்கான தேர்தல் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்று அமெரிக்காவிலிருந்து செயற்படும் விடுதலைப்புலி ஆர்வலர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதனால் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

Exit mobile version