Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடளாவிய ரீதியில் 3 இலட்சம் போலி வாக்குச் சீட்டுகள்!

நாடளாவிய ரீதியில் 3 இலட்சம் போலி வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாரம் 21,700 போலி வாக்குச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தலுக்கான பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.தற்போது ஏனைய 3 இலட்சம் போலி வாக்குச் சீட்டுகளும் எங்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என கண்டறிவதற்கான முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, புத்தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் 21,700 போலி வாக்குச் சீட்டுகள் நிரப்பப்பட்ட இரு வாக்குப் பெட்டிகளை பொலிஸார் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version