Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோழர்.தங்கவடிவேலு காலமானார்

thangavadiveluஇடதுசாரி அரசியல் போராளியும், இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் முன்னோடியுமான தோழர்.தங்கவடிவேலு அவர்கள் நேற்றய தினம் – 29.07.14 – அன்று கொழும்பில் காலமானார். 1931 ஆம் ஆண்டு பிறந்த திரு.கே.தங்கவடிவேலு அவர்கள் நீண்டகாலமாக ஆசிரியர் தொழிலாற்றியவர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கடமையாற்றிய அவர் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் பலவற்றில் முன்னணிப் போராளியாகச் செயற்பட்டவர்.

இலங்கையில் முதலாவது ஆயுதம் தாங்கிய போராட்டமான தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியில் தோழர் சண்முகதாசனுடன் இணைந்து செயற்பட்டவர். தங்கவடிவேலு அவர்கள் இனியொருவில் இசை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் சௌந்தரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version