Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொடர் தண்டாவாளத் தகர்ப்புகள் மனித உரிமை மீறல்.

விழுப்புரத்தில் தண்டவாளம் தகர்க்கபப்ட்டு ஒருவராம் ஆகிவிட்ட நிலையில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று இடங்களில் ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததுள்ளதாக தமிழக போலீஸ் கூறுகிறது. ஆனால் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே இது புலி ஆதரவாளர்களின் சதி என்று அறிக்கை விட்டு அவர்களை நோக்கியே விசாரணையைத் திருப்பும் போலீஸ் இதுவரை குற்றவாளிகள் என்று யாரையும் கைது செய்யவில்லை. துவக்கத்தில் அறிக்கை மேல் அறிக்கை விட்டு ஈழ ஆதர்வாளர்கள் மீது கொச்சைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட போலீஸ் இப்பொது மௌனமாகி விட்ட நிலையில், தமிழகம் முழுக்க ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசின் மீதும் போலீசின் மீதும் கடும் கொதிப்பில் உள்ளனர். விழுப்புரம் அருகே சித்தணியில் கடந்த 12-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில், காவல்துறையின் விசாரணையில் நடந்த மனித உரிமைமீறல் குறித்து உண்மையை கண்டறிய பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட உண்மை அறியும் குழு பேராசிரியர் . மார்க்ஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை விழுப்புரம் வந்தனர்.

கோ. சுகுமாரன், பேராசிரியர் சே. கோச்சடை, பி.வி. ரமேஷ், எம். பர்க்கத்துல்லா, மு. சிவகுருநாதன், இரா. முருகப்பன், பாஸ்கர், லூசியானா, .ராஜகணபதி, . காளிதாஸ், ரஸ்கின்ஜோசப், ஜெயராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இரண்டு நாள்களாக அவர்கள் சம்பவம் நடந்த இடம், அப்பகுதி மக்கள், ரயில்நிலைய அலுவலர், காவல்துறை அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆகியோரிடம் கருத்தறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ரயில் தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பான புலனாய்வில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும், கையால் எழுதப்பட்ட தாளை வைத்து ஒரு கோணத்தில் மட்டுமே புலனாய்வு மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத் தக்கது.

தொடர்ந்து ஈழத் தமிழர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடி வந்த இந்த இளைஞர்களை, அதிலும் குறிப்பாக தமிழ்வேங்கை, ஜோதிநரசிம்மன், எழில்இளங்கோ ஆகியோரை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துப் பழித் தீர்க்க காவல்துறை முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது. எந்த நேரமும் விசாரணைக்கு வருவதற்கு இந்த 11 இளைஞர்களும் தயாராக இருந்த நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று 3 முதல் 4 நாள்கள் வரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததோடு அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னர் தினந்தோறும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது போல அவர்களை வற்புறுத்தி பொய் ஆவணங்கள் தயாரிக்க முற்பட்ட க்யூ பிரிவு காவல்துறையினர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வழக்கை க்யூ பிரிவிலிருந்து மாற்றி ஒரு டிஐஜி தலைமையிலான சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வெறும் சுவரொட்டி ஒட்டிய ஒரு காரணத்துக்காக இந்த 11 பேரில் நால்வர் உள்ளிட்ட 6 பேரை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் காவலில் வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version