Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தைப்பொங்கல் தினத்திலும் உரிமை மறுக்கப்பட்ட அரசியல் கைதிகள் : உதுல்

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகளை தைப்பொங்கல் தினமான நாளை அவர்களது உறவினர்கள் சந்தித்துப் பேசுவதற்கோ அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்கோ எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என நாம் இலங்கையர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான உதுல் பிரேமரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஞாயிறு தினங்களில் கைதிகளைச் சந்திப்பதற்கான அனுமதி இல்லை என்பது வழமையானதொரு விடயமாகவிருந்தாலும் இந்துக்களின் முக்கிய தினமான தைப்பொங்கல் தினமான நாளையேனும் (15) தமிழ்க் கைதிகளை மட்டுமாவது அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்க் கைதிகளை அவர்களது உறவினர் நாளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையும் சிறைச்சாலை நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version