Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் முடிவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது, மகிந்த அவசரக் கூட்டம், கொழும்பில் இராணுவம்

electionslமைத்திரிபால சிரிசேன வெற்றிபெறுவதை அடுத்து தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையகதுள் விசேட அதிரடிப்படையினர் நுளைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை மகிந்த ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தலைச் செல்லுபடியாக்கி மேலும் இரண்டு வருடத்திற்கு ஆட்சியை நீடிப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அது தொடர்பான ஆலோசனைக்காகவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மகிந்த நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே தேர்தல் முடிவுகள் தாமதமாக்கப்படுகிறது என கொழும்பில் வத்ந்திகள் உலாவுகின்றன.
ஜனாதிபதி மாளிகை மற்றும் கொழும்பின் பிரதான பகுதிகளில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் கறுவாத் தோட்டம் பகுதியிலும் அதிக இராணுவ நடமாட்டத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் நடக்கும் குத்துவெட்டுக்கள் அன்னிய இராணுவத் தலையீட்டிற்காகத் திட்டமிடப்பட்டவையா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. ஏகாதிபத்தியங்களால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையும் அதன் செல்வாக்கில் நடத்தப்பட்ட தேர்தலும் இன்னும் மனித் உயிர்களைப் பலிகொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஒரு மணி நேர இடைவெளியின் பின்னர் தேர்தல் முடிவுகள் மீண்டும் வெளியாக ஆரம்பித்துள்ளன. பின்வரும் இணைப்பில் முடிவுகளைப் பார்வையிடலாம்.

http://www.ustream.tv/channel/news-1st—sri-lanka

கே.பி, கருணா உட்பட துணைக்குழுக்களின் நிலை என்னவாகும்?

Exit mobile version