Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தலில் போட்டியிட வரதராஜப் பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை!

வடக்குக் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பத்மநாபா அணியின் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்கு நேற்று இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு இக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டாலும், வரதராஜப்பெருமாளை மீண்டும் வடக்கின் முதலமைச்சராக நியமிப்பதில் இந்தியா திரைமறைவில் காய்களை நகர்த்திவருவதாக தகவல்கள் கசிந்தது.

இந்நிலையிலேயே, வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் தமிழர் பிரதேசங்களான வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்துக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டவரே வரதராஜப்பெருமாள்.

பின்னர், இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த வரதராஜப் பெருமாளுக்கு இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியது.

சுமார் 28 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்துவந்த வரதராஜப்பெருமாள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்தார்.

கடந்த வருடம் இலங்கைக் குடியுரிமையைப் பெற விண்ணப்பித்திருந்த வரதராஜப் பெருமாளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் அழுத்தத்தினால் தற்போது அவருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

Exit mobile version