Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசிய இனப் பிரச்சனையும் இலங்கைத் தேர்தலும் : புதிய திசைகளின் கலந்துரையாடல் நிகழ்வு

புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஐந்தாவது பகுதி நாளை வெள்ளி (19.03.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

“தேசிய இனப் பிரச்சனையும் இலங்கைத் தேர்தலும்” என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் மே18 அமைப்பு சார்பில் ஜான் றஹ்மான் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

குரல்வெப் மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம்.

கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.

Exit mobile version