Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசிய இனப்பிரச்சனை: இரண்டு லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வியட்நாமில் இருந்து பொஸ்னியா வரை ஐம்பது ஆண்டு காலப் போர் வன்முறை உயிரிழப்புகள்; உலக சுகாதார ஆய்வுத்திட்டத் தரவின் பகுப்பாய்வு” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது. ‘போர்களால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை, முன்பு மதிப்பிட்டதைக் காட்டிலும் அதிக அளவிலேயே உள்ளது என்றும், ஐம்பது ஆண்டுகளில் போர் மரணங்கள் குறைந்ததற்கான ஆதாரமேயில்லை என்றும் குறித்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம்,  இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் குறித்துப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரில் 58,000 பேர் பலியானதாக, முந்தைய ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. ஆனால், இந்தப் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,69,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று இந்தப் புதிய ஆய்வு கணக்கிட்டுள்ளது.

அதேபோல், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளதாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை சுமார் 61,000 மட்டுமே என்று முன்னைய ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version