Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தெலுங்கானா மாநிலம் கோரி கல்லூரி மாணவர் தற்கொலை

ஆந்திராவில், தனித் தெலுங்கானா மாநிலம் கோரி, கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவன் கல்லூரி அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து, மீண்டும் தனித் தெலுங்கானா பிரச்னை தலைதூக்கும் என்று தெரிகிறது. டர்ந்து நடத்திய போராட்டங்களின் பின்பும் அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்காததால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார். இதனை அடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போலீசார் உடலை எடுத்து செல்ல விடாமல் கோஷம் எழுப்பினர். எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version