Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீர்வு முன்னெடுக்கப்படும் வரை IMF கடன் வழங்குவதில் அர்த்தமில்லை:ஹிலாரி கிளின்டன்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான உரிய காலம் இதுவல்ல என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு சரியான தீர்வு ஒன்று முன்னெடுக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையை வழங்குவதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு பாரியளவிலான நிதி உதவியை தற்போது வழங்கக் கூடாது எனவும் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தை உடனடியாக நிறுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை வழங்குவதில் அமெரிக்க முக்கிய பங்காற்றி வருகின்றது. அமெரிக்காவின் அனுமதியின்றி சர்வதேச நாணய நிதியம் எந்த ஒரு நாட்டுக்கும் கடன் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version