Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருகோணமலையில் தேசியக் கூட்டமைப்பும் அம்பாறையில் முஸ்லீம் காங்கிரசும்

இலங்கையில் இதுவரையிலான மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலையில் பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்றுக்கொண்டது. அம்பாறை மாவட்டத்தில் சிறீலாங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அனுராதபுரத்தில் ஆளும் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மக்கள் வாக்களிப்பில் பெருமளவில் பங்கெடுத்துக்கொண்டனர். சர்வதேசத்திற்கு தமது வெற்றியை காட்டவேண்டும் என்பதை முன்வைத்து இனவாத அடிப்படையிலும், பிரதேச வாதத்தைப் பயன்படுத்தியும், ஏகாதிபத்திய நாடுகளை முன்வைத்துமே மக்கள் ஆதரவை வாக்குப் பொறுக்கும் கட்சிகள் திரட்டிக்கொண்டன.

Exit mobile version