Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாடு தொடங்‌கியது!

தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாடு தொடங்‌கியது!

சனி, 14 ஜூன் 2008( 12:01 IST )

கடலூ‌ரி‌ல் தி.மு.க. மகளிர் அணி முதல் மாநில மாநா‌டு இ‌ன்று காலை கொடியே‌ற்ற‌த்துட‌ன் தொட‌ங்‌கியது. ‌‌‌பி‌ற்பக‌ல் 2 ம‌ணி‌க்கு நடைபெறு‌ம் மக‌ளி‌ர் ஊ‌ர்வல‌த்தை முதலமைச்சர் கருணாநிதி தனி மேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார்.

தி.மு.க. மகளிர் அணியின் முதல் மாநில மாநாடு, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று காலை 9 ம‌ணி‌‌க்கு கொடியே‌ற்ற‌த்துட‌ன் தொடங்‌கியது. கொடியை வச‌ந்‌தி கணே‌ச‌ன் ஏ‌ற்றுவை‌த்து தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக 3 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

முதல் நாள் மாநாடு அரசியல் மாநாடாகவும், 2-ம் நாள் மாநாடு சமுதாய சீர்திருத்த மாநாடாகவும் நடைபெறுகிறது. முதல் நாள் மாநா‌‌‌ட்டை இ‌ன்று காலை 9 மணிக்கு வசந்தி கணேசன் கொடியேற்றி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். பிற்பகல் 2 மணிக்கு 3 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது. இதனை நூர்ஜகான் பேகம் தொடங்கி வைக்கிறார்.

Exit mobile version