Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் CNN கண்ணன் இனச்சுத்திகரிப்பின் இலங்கை இராணுவ முகவர்:தமிழ்நெட்

tamilcnn_logoதமிழ் சீ.என்.என் என்ற செய்தி இணையத்தளத்தை நடத்திவந்த கண்ணன் என்பவர் இலங்கை அரசின் இராணுவ ஆட்சேர்ப்பின் பின்புலத்தில் செயற்பட்ட பிரதான முகவர் என்று தமிழ்நெட் ஆங்கில இணையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை அரசிற்கு எதிரான செய்திகளையும், புலிகளை ஆதரிக்கும் கட்டுரைகளையும் பிரசுரிக்கும் ‘தேசிய’ இணையங்கள் வரிசையில் தமிழ் சீ.என்.என் பிரதானமானது. வெறுமனே புலி ஆதரவாளர்களாகவும், ‘தமிழ் உணர்வாளர்களாகவும்’ தம்மை இனம்காட்டும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பின்புலம் இலங்கை அரசாகவோ அன்றி உலகின் நாசகார உளவு நிறுவனங்களில் ஒன்றாகவோ இருக்கலாம் என்பதற்கு தமிழ் சீ.என்.என் மிகச்சிறந்த உதாரணம்.

வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராட வேண்டும் என்பது இலங்கையில் தவிர்க்க முடியாத முன்னிபந்தனை. இப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் இலங்கையில் ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களான மலையக மற்றும் இஸ்லாமியத் தமிழர்களுடனான இணைந்த போராட்டம் அவசியமானது. ஏகாதிபத்திய சார்பு ராஜபக்ச பேரினவாத அரசால் ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவும் பங்களிப்பும் அவசியமானது. இதனை நிராகரித்து வட கிழக்குத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் இனவாதிகள் இலங்கை அரசின் ஆதரவாளர்களே என்பது மறுபடி ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.

இனப்படுகொலையில் பங்களித்த பின்னர் அமெரிக்க இராணுவக் கல்லூரியில் பயின்ற உதய பெரேரா

அமெரிக்க இராணுவக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை அரசின் வடமாகாண இராணுவத் தளபதியான உதய பேரேரா என்பவரது தலமையில் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இராணுவம் சார்ந்த பொருளாதாரம் தோற்றுவிக்கப்பட்டு மக்கள் அதனுள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இராணுவக் குடியிருப்புக்களாலும், திட்டமிட்ட சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாலும் வடக்கும் கிழக்கும் நில ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றது. இராணுவத்தின் சேவகர்களாக, அதன் செயற்பாடுகளில் தங்கி வாழும் சமூகம் சர்வதேச நாடுகளின் துணையோடு தோற்றுவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இராணுவப் பொருளாதாரத்தில் தங்கி வாழ்கின்ற சமூகத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை இனப்படுகொலை இராணுவத்தின் சேவகர்களாகச் செயற்படுவதற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுவருகின்றது. 18 இற்கும் 32 இற்கும் இடையேயான வயதையுடைய ஆண்களும் 18 இற்கும் 30 வயதிற்கும் இடையேயான பெண்களும் தமிழர்கள் மத்தியிலிருந்து அணிதிரட்டப்படுகின்றனர்.

இந்த அணிதிரட்டலின் பின்னணியில் புலிகளின் முன்னைநாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி யும் அவரது அடியாட்களும் செயற்படுவதாகவும் சீ.என்.என் இணையத்தை நடத்திவந்த கண்ணன் அவர்களுடன் கூட்டிணைந்துள்ளதாகவும் தமிழ் நெட் மேலும் தெரிவிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்ற கண்ணன் இலங்கையில் வசிக்கும் யாதவன் சோமசுந்தரம் என்பவருடன் இணைந்து இராணுவத்தின் சேவர்கள் வேலைக்கு அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கண்ணன், யாதவன்

அரச துறை வேலைக்கு ஆட்சேர்ப்பதாகப் போலி தன்னார்வ நிறுவனம் ஒன்றின் ஊடாக பிரசாரங்களை மேற்கொண்ட கண்ணன் குழுவினர் ஆட்சேர்பின் இறுதியில் இராணுவத்திடம் நேர்காணலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அமெரிக்க அரசு தலைமைதாங்கும் அபிவிருத்தியின் முக்கிய சின்னமாக விளங்குவது மதுபானச் சாலைகளும் ‘நாகரீகமான’ விபச்சாரமுகாகும். தமிழ் சீ.என்.என் கண்ணனும் யாதவனும் இதனை ஒத்த மதுபானச் சாலை ஒன்றை வடமராட்சிப் பகுதியில் ஆரம்பித்துள்ளதாக தமிழ் நெட் கூறுகிறது.
தகவல்கள் வியப்படைவதற்கில்லை. வயிற்றுப்பிழைப்பிற்கான ‘தேசியத்தின்’ பேரால் உலகின் கிரிமினல்

அரசுகளோடும் இலங்கை அரசுடனும் இணைந்து விடுதலை பெற்றுத்தரப்போவதாகக் கூறும் தமிழர்களின் தலைமைகளுக்கு கண்ணன் ஒரு உதாரணம் மட்டுமே.

Exit mobile version