Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் அகதிகள் மீதான இனச்சுத்திகரிப்பில் ஜெயலலிதா அரசு

refufeesindiaசெந்தூரன் என்ற ஈழத் தமிழ் அகதி இருதினங்களின் முன்னர் சென்னைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனினும் இவர் குறித்த இறுதிக்த தகவல்கள் வெளியாகவில்லை. தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என செந்தூரன் கோரிக்கைவிடுத்திருந்தார். செய்யாறு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த செந்தூரன் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தூரனை விடுதலை செய்யக்கோரி செய்யாறு முகாமில் இருந்து வரும் இலங்கை அகதிகள் 17 பேர், அகதி சிவரூபன் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் அகதிகளை அனாதைகளாக்கியுள்ளனர். தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அதிகார வர்க்கத்தின் அடியாட்கள் போன்று செயற்படும் தமிழ் போலித் தேசியவாதிகள் அகதிகள் அழிவதற்குத் துணை செல்கின்றனர்.

Exit mobile version