தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசியலமைப்பிலும் பாராளுமன்ற ஜனநாயகத்திலும் நம்பிக்கையிழந்துள்ளனர். இவ்வாறு நம்பிக்கையிழந்துள்ள சூழலில் மறுபடி அவர்களுக்குப் பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலில் பங்காற்றுவதும், அதற்கு ஆதரவு வழங்குவதும் தவறானது என புதிய திசைகள் ஒன்று கூடல் நிகழ்வில் கருத்துத் தெரிவித்தார். இந்த வகையில் புலம் பெயர் தமிழர்கள் இலங்கைத் தேர்தலில் பங்காற்றும் எந்தக் கட்சியையையும் ஆதரிபதென்பது தவறான முடிபாகும் என மேலும் தெரிவித்த அவர், நாம் பலமான நிலையிலிருந்தால் தேர்தலில் பங்குபற்றுவது குறித்துச் சிந்திக்கலாம் என்றும் இன்றைய சூழலில் இது தவறான நடவடிக்கையே என மேலும் தெரிவித்தார்.
இதனால் தான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றாக இடது சாரிகள் மாற்று வடிவிலான ஜனநாயக வழிமுறைகளை முன்வைக்கிறார்கள் என்று மேலும் கருத்து வெளியிட்டார்.
சபேசன் பனிமலர் சஞ்சிகையின் ஆசிரியரும்,புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரும் பல இடது அமைப்புக்களோடும் தொடர்புச்டையவ்ர் என்பவை குறிப்பிடத்தக்கது.