Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ப்பேசும் முஸ்லீம்கள் வெளியேற்றம் : கட்சிகள் கண்டனம்

சிங்கள மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியோ எனக் கருதத் தோன்றும் வகையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் தலைனகரின் முக்கிய பகுதியான கொம்பனித் தெருவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வீடுகளை உடைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு சமர்ப்பிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பனிர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் காணி உறுதிகளைப் பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூற்றுக் கணக்கான வருடங்கள் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நகர அபிவிருத்தியை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான பிரதேசங்களில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version