Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்நாட்டை பிரிக்கக் கூடாது- திருமாவளவன்.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா அமைக்கும் நீண்ட நாள் கோரிக்கையை வாய்மொழி அளவில் இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்தியா முழுக்க தனி மாநிலக் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. போடோலாந்து, கூர்க்காலாந்து கோரிக்கைகள் நியாயமான கோரிக்கைகள் என்றாலும் தமிழகத்திலும் தங்களின் சுயலாப பதவி அரசியலுக்காய் சிலர் தமிழகத்தை பிரிக்கக் கோரி வருகின்றனர். இக்கோரிக்கைக்கு பரவலான எதிர்ப்பே எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன்.

தனி தெலுங்கானா பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி தமிழக முதல்வர் கூறிய கருத்தையே நான் வழி மொழிகிறேன். இவ்வளவு காலம் முடிவெடுக்க தவறிய மத்திய அரசு, இப்போது எடுத்த அவசர முடிவு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.மேலும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற சிலரது கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை. தமிழ்நாட்டை பிரிக்க கூடாது என்றார்.

Exit mobile version