Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் படுகொலை நிறுத்தப்பட வேண்டும்: தா.பாண்டியன்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா. பாண்டியன் சென்னையில் பத்திரிகையாளர் மத்தியில் பேசும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். வெறுமனே அவதானியாக இருக்காமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்தியா தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார் அவர். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தாது எனத் தெரிவித்த போதும் அதனைப் பகிரங்கமாக இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

Exit mobile version