Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறீர்களா ? : மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேஸ்வரம் இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.

ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் இருபதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.

இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறீர்களா என்று கேட்டவாறு இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தப்பிவந்தவர்கள் தெரிவித்தனர். இத்தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Exit mobile version