Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்களின் நிலையை ஆய்வு செய்வது என்ற தலையங்கத்தில் இலங்கை செல்லும் பாராளுமன்றக் குழு

தமிழர்களின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வது என்ற தலையங்கத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு வரும் ஏப்ரல் 16-ல் இலங்கை செல்லவுள்ளது.
இந்த விஜயத்தில் கலந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த விஜயம் ஒத்தி வைக்கப்பட்டிரு;தமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினராகிய நர்ஙகள் அடுத்த மாதம் 16-ந் தேதி புறப்பட்டு செல்கிறோம். 21-ந்தேதி திரும்புகிறோம். மேலும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை என்னுடன் வரும் குழு உறுப்பினர்கள் பார்வையிடுகிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் ஆய்வு செய்கிறோம். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

Exit mobile version