Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்.

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மீனவர்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இச்சம்பவம் நேற்றும் நடந்துள்ளது. நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிசூடு நடத்தி ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க சென்றன. நடுக்கடலில் அவர்கள் மீன்பிடிக்க கடலில் வலையை விரித்துவிட்டு காத்திருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். கடற்படைக்கு சொந்தமான 4 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். ராமேசுவரம் மீனவர்கள் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை அவசரம், அவசரமாக எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தாங்கள் புறப்பட்டு சென்றுவிடுவதாக இலங்கை கடற்படையினரிடம் தெரிவித்தும், சில படகுகளில் இறங்கி வலைகளை அறுத்து எறிந்தனர். மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்தனர். படகுகளில் இருந்த விலை உயர்ந்த இறால் மீன்களை அள்ளி சென்றனர். இதனால் பாதி மீன்கள் பிடித்திருந்த நிலையில் ஏமாற்றத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

Exit mobile version