Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து‌வி‌ட்டு வலைகளை அறு‌த்து எ‌‌றி‌‌ந்து‌ள்ளன‌ர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை‌ப்பட்டினத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இ‌‌ன்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இ‌ந்த துப்பாக்கி சூட்டில் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மேலு‌ம் ‌மீ‌‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து ‌வி‌ட்டு, வலைகளை அறு‌த்து எ‌‌றி‌ந்து கட‌லி‌ல் ‌வீ‌‌‌சியு‌ள்ளன‌ர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Exit mobile version