Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக் மீனவர் மீது மீண்டும் இலங்கைக் கடற்படை தாக்குதல்

வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார்(35), பாஸ்கர்(42), ராஜ்குமார்(35) ஆகிய 3 மீனவர்களும் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் நேற்று படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென துப்பாக்கிகளுடன் படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.

மேலும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டு மீதி உள்ள நல்ல வலைகளை எடுத்துச் சென்று விட்டனர்.

இலங்கை கடற்படையினரிடம் இருந்து உயிர்தப்பிய ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பி தாங்கள் தாக்கப்பட்டது குறித்து வேதாரண்யம் காவல்துறையில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version