Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தனிச் சிங்களத் தேசிய கீதம் : டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்க்கும் போர்க்குற்றங்களுக்கும் தமிழர் தரப்பிலிருந்து ஆதரவு வழங்கிய அரச துணைக்குழுவான ஈ.பி.டி.பி அமைப்பின் பொதுச் செயலாளரான டக்ளஸ் தேவானந்தா, பேரின வாதத்திற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளார். சிங்கள பௌத்த பேரினவாதிகளின் மொழி அடக்குமுறைகளின் இன்னொரு பகுதியான சிங்களம் மட்டும் தேசிய கீதத்தை டக்ளஸ் தேவானந்தா ஆதரித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்.

அந்த வகையில் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

Exit mobile version