Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயார்!!!

19.10.2008.

இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை இலங்கை அரசு நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் உலகை ஏமாற்ற இலங்கை அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.

Exit mobile version