Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

meeting01

இந்திட அரசு டெல்லியில் நடத்திய மாநாட்டின் முடிவுகள் குறித்த தீர்மானம் இன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் இனப்படுகொலை நடத்திய இந்திய அரசு தனது ஆதரவாளர்களை அழைத்து தனது குகைக்குள்ளேயே கூட்டம் நடத்தி 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பங்களித்தவர்களின் ஊடாகக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்வதற்காக இந்திட அரசினால் திணிக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு இந்திய அரசைக் கோரும் தீர்மானம் நிறைவேற்றுவதன் ஊடாக ஈழப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்களைக் கூடக் குழிதோண்டிப் புதைப்பதற்கு வழிசெய்துள்ளனர் .
மாநாட்டில் தலைமை வகித்த திரு பொன் சத்தியசீலன் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அவமனகரமான அறிக்கை இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களை இந்திய அரசுக்கு மீண்டும் காட்டிக்கொடுக்கிறது. புலம் பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் அனைத்தும் ஐந்தாம்படைகள் போன்று செயற்படும் நிலையில் இந்திய அரசின் குரலை நேரடியாகவே ஒலிக்கும் கூட்டம் ஒன்று தயாராகிவிட்டதை இந்த நிகழ்வு தெளிவாகக்காட்டுகின்றது.
தெற்காசியாவில் நடைபெறுகின்ற ஒடுக்கப்படும் மக்களின் ஒவ்வொரு போராட்டத்தினதும் எதிரியான இந்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள புதிய முகவர் கும்பலைத் தயார்செய்துள்ளது.
சத்தியசீலனைத் தவிர, பி.ஏ.காதர், சார்ள்ஸ், ராம்ராஜ், ஜென்னி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்ட அறியப்பட்ட முகங்கள்.

 

மாநாட்டுத் தீர்மானங்கள் – ஆங்கிலத்தில்

தொடர்புடைய பதிவுகள்:

டெல்லியில் இரத்தச் சோறு உண்கிறார்கள் : சபா நாவலன்

Exit mobile version