Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டப்லனில் அயர்லாந்து சோசலிசக் கட்சியுடன் இணைந்து போராட்டம்

அயர்லாந்து தலைநகர் DUBLIN நகரில் அயர்லாந்து மக்களும், அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் இணைந்து முதன்முறையாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதில் நூற்றுக்கணக்காண ஐரிஷ் மக்களும் அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.

அங்கு வருகை தந்த அயர்லாந்து சோஷலிச கட்சியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோ ஹிஜின்ஸ் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மற்றும் பலர் அங்கு உரையாற்றினர்.
புலிக்கொடியற்று மக்களுக்காக நடத்தப்பட்ட இன்னொரு போராட்டம் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுவது மட்டுமல்ல பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version