Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜே.வி.பி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு!?

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இன்று முற்பகல் பொலிஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைத்தனர்.

எனினும் நீதிமன்ற அனுமதியின்றி சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் நீதிமன்ற அனுமதியைப் பெற பொலிஸார் திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் அங்கு பெருந்தொகையான பொலிஸார் இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version