Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜேர்மனியில் நில அபகரிப்பிற்கு எதிராக ஈழத் தமிழர் மக்கள் அவை

ஜேர்மனி மத்திய மாகாணத்தில் நடைபெற்ற இடதுசாரி இளையோர் அமைப்பின் மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் மக்கள் அவை மத்திய மாநில பேச்சாளர் திரு கோகுலன் அவர்கள் கலந்து கொண்டார் , இவ் மாநாட்டில் நடைபெற்ற பயற்சி பட்டறையில் “சர்வதேச நாடுகளில் அடக்கப்படும் தேசிய இனங்களும் அதற்கு எதிரான மக்கள் போராட்டமும்” பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது .
குறிப்பாக பாலஸ்தீனிய மக்கள் மீதான அடக்குமுறை அதற்கு எதிரான போராட்டம் , குர்டிஸ்தான் மக்கள் மீதான அடக்குமுறை மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டு உரையாடப்பட்டது . அதேவேளையில் தமிழ் மக்கள் மீது தொடரும் இனவழிப்பு மற்றும் நிலப்பறிப்பு ஆகிய விடையங்களும் உரையாடப்பட்டது .
உரையாடலின் இறுதியில் இடதுசாரி கட்சியின் இளையோர் பிரிவு எதிர்காலத்தில் தமது வேலைத்திட்டங்களில் தமிழீழ போராட்டத்திற்கும் தமது முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததோடு மற்றும் மிக விரைவில் மத்திய மாநில இடதுசாரி கட்சி சார்பில் சிங்கள அரசின் திட்டமிட்ட நிலஅபகரிப்புக்கு எதிராக தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்ற உள்ளதாக யேர்மன் இடதுசாரி கட்சியின் மத்திய மாநில பேச்சாளர் திரு Rüdiger Sagel அவர்கள் கூறினார் .அத்தோடு இறுதியில் திரு கோகுலன் அவர்களால் மனுவும் கையளிக்கப்பட்டது .

Exit mobile version