இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன,
தீக்குளித்த தமிழரை சுவிஸ் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேநேரம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுவிஸ் வாழ் தமிழர்களினால் ஐ.நா முன்றலில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது