
மகிந்த ராஜபக்சவிற்கு நம்பகமான சோதிடர்களின் ஆலோசனையின் பேரில் 19.01.2001 பிற்பகல் 2 மணிக்கு அவர் திடிரென அமரிக்கா பயணமானார் எனத் தெரிய வருகிறது. சாத்திரங்களின் அடிப்படையில் இலங்கயை விட்டு 10 நாட்களுக்கு வெளியே செல்லவேண்டும் என்ற ஆலோசனைப்படி அவர் அங்கிருந்து அமரிக்கா நோக்கிப் புறப்பட்டார். லிபியாவில் தங்கியிருக்கும் நாமல் ராஜபக்ச அமரிக்காவில் அவருடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்காசியாவின் மிகக் கொடூரமான சர்வாதிகளில் ஒருவராகக் கருதப்படும் மகிந்த ராஜபக்ச தனக்குப் பாதுகாப்பான நாடாக தெரிந்தெடுத்திருப்பது அமரிக்கா என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.