Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சேயின் 82 வது நினைவு தினம்

போக்கோ தியரி என்று அழைக்கப்படும் கோட்பாட்டை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராங்களை கெரில்லா யுத்த முறையில் நடத்தி வெற்றி பெற்ற சேயின் 82 வது நினைவு தினம் இன்று. லத்தீன் அமரிக்க நாடுகளில் இன்றும் கதா நாயகன் போலத் திகழும் சே குவேரா, கியூபா விடுதலைப் போராட்டத்தில் பிடல் கஸ்ரோவுடன் இணைந்து உழைத்தவர். போராட்டம் வெற்றியடைந்த பின்னர், பொலிவியாவிற்குச் சென்று அங்கு போராட்டத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபடுகையில் அமரிக்க உளவுப்படையால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட்டவர். 70 களில் இலங்கையில் ஜேவீபியால் நிகழ்த்தப்பட்ட ஆயுதப் போராட்டங்களும் சேகுவேரா போராட்டங்கள் என்றே அழைக்கப்பட்டன. சேயின் பாதிப்பு இல்லாத போராட்டங்கள் அரிது.

Exit mobile version