Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னை மாநில கல்லூரி மாணவர் குழுக்கள் அரிவாளுடன் மோதல்: 2 பேர் படுகாயம்

அரிவாள்சென்னை மாநில கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருவது வழக்கமான செயல்தான். இந்நிலையில், 29 ஏ பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும், 6 டி பேருந்தில் பயணிக்கும் மாணவர்களுக்கும், கல்லூரி தேர்தல் காரணமாக சில பிரச்சனைகள் இருந்துள்ளது.
இதில் 29 ஏ பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தோல்வியடைந்த மாணவர்கள், 29 ஏ பேருந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அரிவாளைப் பயன்படுத்தியாகக் கூறப்படுகிறது.
மேலும் கல்லூரி வளாகத்தில் ஆகாஷ் என்ற மாணவரும், அருண்குமார் என்ற மாணவரும் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் தெரிந்ததும் திருவல்லிகேணி உதவி ஆணையர் பீர் முகமது தலைமையில் மாநிலக்கல்லூரி வளாகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா, தொலைக்காட்சிகள், ஊடகங்கள் போன்றன விதைக்கும் வன்முறைக் கலாச்சாரத்தின் மறுபதிப்பே இந்த வன்முறையும் வாள்வெட்டும். பொலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் முதலில் வன்முறைக் ஊடகங்கள், அரசியல் வாதிகளில் ஆரம்பிக்கலாம்.
ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் வருவதற்கு கல்லூரி நிர்வாகத்தினரே காரணம் என்று போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கூறிய போலீஸ் தரப்பு, ” மாணவர்கள் கொட்டத்தை அடக்க கல்லூரி நிர்வாகம் அனுமதித்தால் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version