Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னை அமரிக்க தூதரகம் முற்றுகை

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் எடுத்ததை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை தவுகித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் பீட்டர்ஸ் சாலையில் தடுத்து நிறத்தினார்கள்.
போராட்டத்தில் பங்கேற்றோர் அமெரிக்க ஜனதிபதி ஒபாமாவின் படத்தை எரித்தனர். அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் அமெரிக்க தூதரகம் அருகே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அண்ணா சாலையிலும் அருகிலுள்ள சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் சென்னையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று சென்னையில் அமெரிக்க துணை தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Exit mobile version