
போராட்டத்தில் பங்கேற்றோர் அமெரிக்க ஜனதிபதி ஒபாமாவின் படத்தை எரித்தனர். அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் அமெரிக்க தூதரகம் அருகே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அண்ணா சாலையிலும் அருகிலுள்ள சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் சென்னையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று சென்னையில் அமெரிக்க துணை தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.