Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னையில்;இலங்கை தமிழர் படுகொலையைக் கண்டித்து திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம்

09.12.2008.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று  ஒரு நாள் திருநங்கைகள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

தமிழகமெங்கிலும் இருந்து 800 திருநங்கைகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அத்தனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக வழங்கினார்கள்.

கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சினைக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சினையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்த உண்ணாவிரத்தைப் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

உண்ணாவிரதத்தை முடித்து வைத்து திருமாவளவன் உரையாற்றுகையில்,

”இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசி வரும் தமிழக அரசியல்வாதிளை, அரசியல் கோமாளிகள் என்று இழிவு படுத்திப் பேசிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கூற்று கண்டனத்துக்குரியது” என்றார்.

 

Exit mobile version